காஷ்மீரில் உள்ள 11 இடங்களில் என்.ஐ.ஏ ரெய்டு  

ஜம்மு-காஷ்மீரில், 11 இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

காஷ்மீரில் உள்ள 11 இடங்களில் என்.ஐ.ஏ ரெய்டு   

ஜம்மு-காஷ்மீரில், 11 இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக அப்பாவி மக்கள் மீது  தாக்குதல் நடத்தப்படும் சம்பவம் அதிகரித்துள்ளது. உள்ளூர் மக்களுடன் பதுங்கி இருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதாகவும், தீவிரவாத செயல்களுக்கு சிலர் நிதியுதவி அளிப்பதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, தீவிரவாத செயலுக்கு உதவுவோரை என்ஐஏ அதிகாரிகள் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று பாரபுல்லா, புல்வாமா, அவந்திபோரா, சோப்போர் மற்றும் குல்காம் உள்ளிட்ட 11 இடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக நடந்த சோதனையின் போது, காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானியின் பேரன், தீவிரவாதிகளுக்கு நிதி உதவி அளித்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர், அரசு அதிகாரி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.