போதைப்பொருள் வியாபாரிகளுடன்  தொடர்பு.? தேவேந்திர ஃபட்னாவிஸ் மீது நவாப் மாலிக் பரபரப்பு குற்றச்சாட்டு... 

மும்பையில் போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிசுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக மகாராஷ்டிரா மாநில அமைச்சர் நவாப் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.
போதைப்பொருள் வியாபாரிகளுடன்  தொடர்பு.? தேவேந்திர ஃபட்னாவிஸ் மீது நவாப் மாலிக் பரபரப்பு குற்றச்சாட்டு... 
Published on
Updated on
1 min read

போதை பொருள் வழக்கில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மும்பை மண்டல இயக்கநர் சமீர் வான்கடே  மீது அமைச்சர் நவாப் மாலிக் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து வருகிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது நவாப் மாலிக் புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

அதில் சமீர் வான்கடே போதைப்பொருள் மோசடி மன்னன் என குற்றம்சாட்டியுள்ள அவர், சமீர் வான்கடேவை போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டதன் பின்னணியில் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனை நிரூபிக்கும் வகையில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஜெய்தீப் ராணா தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com