ஒமிக்ரானை கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது... தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் கவலை...

ஒமிக்ரான் தொற்றை கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளதாக தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஒமிக்ரானை கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது... தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் கவலை...
Published on
Updated on
1 min read

முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் தொற்று அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திய டெல்டா வகையை காட்டிலும் அதீத பரவல் தன்மை கொண்டது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்நிலையில், ஒமிக்ரான் வைரஸ் குறித்து தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள எச்சரிக்கை உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஒமிக்ரான் தொற்றை கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளதாகவும், இதனால் இளைஞர்களே பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஒமிக்ரான் மனித உடலில் பரவி சிறிது காலம் தங்கிய பிறகே மனிதர்கள் நோய்வாய்ப்படுவதாகவும், இதனால், வைரஸின் உண்மையான தாக்கத்தை கண்டறிவதில் சிக்கல் இருப்பதாகவும் எச்சரிக்கின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com