கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி - மாணவ மாணவியரின் மண்டை உடைப்பு

ஆந்திராவில் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி - மாணவ மாணவியரின் மண்டை உடைப்பு

ஆந்திராவில் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரவில் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவியை நிறுத்த போவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளை அந்தந்த நிர்வாகங்கள் சுயமாக  நடத்தி கொள்ள வேண்டும் எனவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி கட்டணம் பல மடங்கு உயர கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதனை கண்டித்து அனந்தபூரில் அரசு நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி மாணவர்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.

இதில் மாணவர் ஒருவரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் போலீசாருக்கு மாணவர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. மாணவர்களின் போராட்ட களம் போர்களமாக மாறிய சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.