ஆப்கானிஸ்தானை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. 255 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்!!

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 255 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. 255 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்!!
Published on
Updated on
1 min read

ஆப்கானிஸ்தான் கிழக்கு பகுதியிலும் இன்று அதிகாலை 2 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோளில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்திற்கு கிழக்கு மாகாணங்களான பக்திகா, நங்கர்ஹர் மற்றும் கோஸ்டில் ஆகிய மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி தற்போது வரை 255 பேர் பலியாகியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இதில் பக்திகா மாகாணத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாகவும் 25 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com