இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் பாஜக நிர்வாகிகள் உழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி உரை!

இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் பாஜக நிர்வாகிகள் உழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் பாஜக நிர்வாகிகள் உழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி உரை!

பாஜகவின் தேசிய பொறுப்பாளர்கள் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியை பலப்படுத்தவும் நிர்வாகிகளின் செயல் திறனை மறு சீராய்வு செய்யும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் தேசிய நிர்வாகிகள், மாநில கட்சி தலைவர்கள், அமைப்பு செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் என பலர் பங்கேற்றுள்ளனர். மாநிலம் வாரியாக கட்சியின் பொதுச் செயலாளர்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் மாநிலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

இக்கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்றுள்ள பிரதமர் மோடி நிர்வாகிகள் இடையே உரையாற்றி வருகிறார். காணொலி வாயிலாக கலந்துக் கொண்டுள்ள பிரதமர் மோடி நிர்வாகிகள் இடையே உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், இந்தியர்களுக்காவும், இந்தியாவுக்காகவும் பாஜக நிர்வாகிகள் உழைக்க வேண்டிய நேரம் இது என்றும் எதிர்ப்பாளர்களால் நிறைந்துள்ள நாடாக இந்தியா திகழ்வதாகவும் கூறினார். பாஜகவுக்கு நாட்டு மக்கள் பேராதரவு வழங்கி வருவதாகவும், அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்குடன் செயல்பட்டு வருவதாகவும் கூறினார். இந்திய மக்களின் மனநிலையை பாஜக மாற்றியுள்ளதாக கூறிய பிரதமர் மோடி, அறிவிக்கப்படும் திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறதா என்ற எதிர்பார்ப்பால் அரசின் பொறுப்பு அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.