மத்திய அரசுப் பணிகளுக்கு பொதுத் தேர்வுகள்... அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பம்...
அடுத்தாண்டு தொடக்கத்தில் இருந்து மத்திய அரசுப் பணிகளுக்கு நாடு முழுவதும் பொதுத் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய இணை அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
”கரூர் நாடாளுமன்ற தொகுதியில் சுமார் 50 ஆயிரம் பேரும், கரூர் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் பேரும் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 9 வார காலமாக ஊதியம் கொடுக்கப்படவில்லை. அன்றாட தேவைக்கு கூட பணம் இல்லாமல் சிரப்படுவதாகவும், மத்திய அரசும், சம்மந்தப்பட்ட அமைச்சரும் இதில் தலையிட்டு அவர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்”, என்றார்.
மேலும், ”தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகா அரசுக்கு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடுமையான கண்டனம் தெரிவிக்கிறேன் என்றார். மத்திய அரசு மாநில அரசுகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்பது நமது உரிமை”, என்றார்.
தொடர்ந்து, ”பாஜக அரசும், பாஜக மாநில தலைவரும் ஊடகங்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர், டெல்லி நியூஸ் கிளிக் ஊடகவியலாளர் வீட்டில் சோதனை செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் பெண் பத்திரிகையாளரிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடந்த கொண்ட விதம் அதிர்ச்சி அளிக்கிறது. இதனை கண்டிக்கிறேன்”, என்றார்.
நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களின் எதிரொலியாக டெல்லி உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
நேபாளத்தில் 4.6 என்ற ரிக்டர் அளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் முதலாவதாக மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து 6.2 என்ற ரிக்டர் அளவில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் தெற்கு டெல்லி, என்.சி.ஆர் உள்ளிட்ட பிற பகுதிகளிலும் உணரப்பட்டது. இதனால் அலுவலகங்களில் இருந்து பணியாளர்கள் உடனடியாக வெளியேறினர். மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் சாலையில் தஞ்சமடைந்தார்.
நேபாள நிலநடுக்கத்தின் எதிரொலியாக ஹரியானாவின் குருகிராம், ராஜஸ்தானின் ஜெய்பூர், சண்டிகர் உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து கொண்டு சாலையில் குவிந்தனர்.
உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசத்தின் லக்னோ, ஹாபூர், அம்ரோஹா ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சத்தீஸ்கா், தெலங்கானா செல்லும் பிரதமா்...ரூ.23 ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட ஆலை அா்ப்பணிப்பு!
பீகார் மாநிலத்தில் 63 சதவீதத்திற்கும் அதிகமாக பிற்படுத்தப்பட்ட பிரிவினர் உள்ளதாக தெரியவந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை அம்மாநில அரசு நேற்று வெளியிட்டது. இதில், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 63 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க : ஆசிய விளையாட்டின் 10வது நாள்: 7 பதக்கங்களை வென்றது இந்தியா!
அதன்படி, மாநில மக்கள் தொகையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் 36 சதவீதமும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் 27 புள்ளி 13 சதவீதமும் உள்ளனர். அட்டவணைப் பிரிவு மக்கள் 19 புள்ளி 65 சதவீதமும் பழங்குடியின மக்கள் 1 புள்ளி 68 சதவீதமும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்து மதத்தினர் 81 புள்ளி 99 சதவீதமும், இஸ்லாம் மதத்தினர் 17 புள்ளி 7 சதவீதமும் இருப்பதாக கூறப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு சாத்தியமானதைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கா் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பல்வேறு வளா்ச்சி திட்ட பணிகளை பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறாா்.
பிரதமர் மோடி சமீப மாதங்களாகத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தனது அரசியல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, தேர்தல் நடைபெறவுள்ள சத்தீஸ்கர் மாநிலத்துக்கு இன்று செல்லவுள்ளார். அங்கு அவா், நாகர்னரில் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள என்எம்டிசி ஸ்டீல் லிமிடெட் ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
இதையும் படிக்க : இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு சாலை மறியல்; போலீசார் தடியடி!
தொடா்ந்து ஜக்தல்பூர் ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கான அடிக்கல்லை நாட்டுகிறாா். பிறகு தெலங்கானா செல்லும் பிரதமா் மோடி அங்கு 8 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.
பின்னா் தெலங்கானா சூப்பர் அனல் மின் திட்டத்தின் 800 மெகாவாட் அலகு மற்றும் பல்வேறு ரயில் உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைக்கும் மோடி, பிரதான் மந்திரி - ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் கட்டப்படவுள்ள 20 முக்கியமான பராமரிப்பு மையத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
PM Modi starts various plans today
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளா்ச்சி திட்ட பணிகளுக்கு பிரதமா் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமா் நரேந்திர மோடி மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி ராஜஸ்தானின் சித்தூா்கா் பகுதிக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமா் மோடி அங்கு மெஹசானா- பதிண்டா - குா்தாஸ்பூா் எரிவாயு குழாய் இணைப்பைத் தொடங்கி வைக்கிறார். அபு சாலையில், ஹிந்துதாஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனம் அமைத்துள்ள சமையல் எரிவாயு நிரப்பும் நிலையத்தைத் தொடங்கி வைக்கிறாா்.
மேலும், ஆயிரத்து 480 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தாரா - ஜலவா் - தீன்தா் பிரிவின் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். கோட்டாவில் தேசிய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் நிரந்த வளாகம், பல்வேறு ரயில்வே திட்டங்கள் உள்ளிட்டவற்றையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
தொடா்ந்து 11 ஆயிரத்து 895 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட டெல்லி - வதோதரா விரைவுச்சாலையை மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் தொடங்கி வைக்கவுள்ள மோடி, ஆயிரத்து 880 கோடி ரூபாய் மதிப்பிலான 5 சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் ஊரக மற்றும் நகா்புறப் பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகள், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறாா்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய இரு மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், நவம்பா் - டிசம்பா் மாதங்களில் அந்த மாநிலங்களுக்குப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.