புதுச்சேரி : துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு...!

புதுச்சேரி : துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு...!
Published on
Updated on
1 min read

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது இது தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டு உள்ளது. 

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை தொடர்ந்து, காற்றின் வேகம் அதிகரித்து வருவதால் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com