என்னடா சொன்ன... சால்னா-க்காக கடையையே காலி செய்த கதை...

வாங்கிய உணவுக்கு கூடுதலாக சால்னா, சாஸ் தராததால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் கடாய் மற்றும் கரண்டியால் ஹோட்டல் ஊழியரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

என்னடா சொன்ன... சால்னா-க்காக கடையையே காலி செய்த கதை...

புதுச்சேரி | உணவு யாருக்கு தான் பிடிக்காது. அதுவும், சீன உணவு வகைக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அதுவும் நூடுல்ஸ்-க்கு இருக்கும் ரசிகர்களை விட அதற்கு கொடுக்கப்படும் சைடு டிஷுக்கு தான் ரசிகர்கள் ஓடோடி வருவார்கள்.

ஆனால், அதன் அளவு எப்போதுமே குறைவாகவே இருக்கும் என்பதால், பல முறை கடைக்காரர்களிடன் சண்டை போட்ட ஆட்கள் குறித்தெல்லாம் நாம் கேள்வி பட்டிருப்போம், பல படங்களில் காமெடி காட்சிகளாகவும் பார்த்திருப்போம். இதுவே நிஜ வாழ்க்கையில் நடந்திருக்கிறது என்று சொன்னால் நம்ப முடியுமா?

மேலும் படிக்க | ஆளுநர் மாளிகை முற்றுகை...! இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

புதுச்சேரி லாஸ்பேட்டை காலேஜ் ரோட்டில் உள்ள ஒரு உணவு விடுதிக்கு கடந்த ஞாயிறு (25 டிசம்பர் - கிருஸ்துமஸ்) மாலை இரண்டு இளைஞர்கள் நூடலஸ், பரோட்டா வாங்கி கொண்டு அதற்கு கூடுதலாக சால்னா மற்றும் சாஸ் கேட்டதாக தெரிகிறது.

அப்போது உணவக ஊழியர் சால்னா இல்லை என கூறியதால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் அங்கிருந்த கடாய் மற்றும் கரண்டியால் ஊழியரை தாக்குவது சிசிடிவி கேமிராவில் பதிவானதை அடுத்து இந்த காட்சிகளுடன் உணவகத்தின் மேலாளர் டேவிட் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஊழியரை தாக்கியது கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணா மற்றும் ஜெய்கணேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கூடுதல் சால்னா மற்றும் சாஸ்-காக ஹோட்டல் ஊழியரை இளைஞர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்...பைக் சாகசத்தில் ஈடுபட்டவர்கள் கைது...!