வினாத்தாள் வெளியீடு... பாஜக தலைவர் கைது...!

வினாத்தாள் வெளியீடு... பாஜக தலைவர் கைது...!

வினாத்தாள் கசிந்தது தொடர்பாக தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் கைது செய்யப்பட்டுள்ளார். 

தெலுங்கானாவில் 10ஆம் வகுப்பு இந்தி பாடத்திற்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்னரே வாட்சப்பில் வெளியானது. இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறை  பிரசாந்த் என்பவரை கைது செய்துள்ளது. பிரசாந்த்திடம்  பாஜக தலைவர் பண்டி சஞ்சயுக்கு தொடர்பு இருந்ததாகவும் அவருடன் தொலைபேசியில் பேசியதற்கு ஆதாரம் கிடைத்துள்ளதால் பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

வினாத்தாளை கசிய விட்ட விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் கைது செய்யப்பட்டதனது தெலுங்கானாவில் பதற்றத்தை ஏற்படுத்தியள்ளது.