ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர் கரையேறியதை அறியாமல்  தேடிய மீட்பு படையினர்...

புதுச்சேரியில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர் கரையேறியதை அறியமால், மீட்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிகழ்வு  அரங்கேறியது. 

ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர் கரையேறியதை அறியாமல்  தேடிய மீட்பு படையினர்...

புதுச்சேரியில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நபரை போலிசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தேடி வந்த நிலையில் அவர் பத்திரமாக கரை ஒதுங்கி வீட்டில் இருந்து பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கடந்த சில  நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, புதுச்சேரியில் உள்ள அனைத்து ஆறுகளும்   நிரம்பி வழிந்து வரும் நிலையில் மக்கள் யாரும் ஆற்றில் இரங்க வேண்டாம் என அரசு எச்சரித்து வருகின்றது,

இந்நிலையில் நேற்று மாலை வில்லியனூர் சங்கரபரனி ஆற்றின் கரையோரம் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த முத்துவேல் (40) என்பவர் மன் சருக்கி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினரின் அவரை ரப்பர் படகின் முலம் காப்பாற்ற முயற்சி செய்த போது கயிறு அறுந்ததால் அவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இதனையடுத்து நேற்று இரவு 1 மணி வரை அவரை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு ஈடுபட்டு வந்தது ஆனால் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்ப்பட்டது,

இதனையடுத்து இன்று காலை 5 மணியில் இருந்து தேசிய பேரிடர் குழுவுடன் மங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணன்  சார்பு ஆய்வாளர் கீர்த்தி தலைமையிலான போலிசார் ட்ரோன் கேமிரா பயன்படுத்தி அடித்து செல்லப்பட்ட  வாலிபரை தேடும் பணியில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது தீயனைப்பு துறையினரால் அனுப்புபட்ட லைஃப் பாய் எனப்படும் ஆரஞ்சு நிற காற்று பலூன் படகு திருகாஞ்சி கோயில் அருகே இருப்பது ட்ரோன் கேமிராவில் தெரிந்தது. 

இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு  சென்று விசாரணை நடத்திய போலிசார் செல்வகுமார் உயிருடன் இருப்பது தெரியவந்தது, மேலும் உயிர் பிழைத்த  முத்துவேல்  கூறுகையில் தாம் இரவே தப்பித்து வீடு வந்து சேர்ந்ததாகவும், தனக்கு ஏற்பட்ட  உடல் சோர்வு காரணமாக வீட்டிற்கு வந்து உறங்கி விட்டதாகவும், தன்னை காப்பாற்ற தேடிய தீயணைப்பு துறையினர், தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் காவல் துறையினருக்கு தனது நன்றிகளை தெரிவித்து கொள்வதாக வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார்.