மேலும் 3 ரபேல் விமானங்கள்... பிரான்சிடம் இந்தியா ஒப்பந்தம்...

இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வு

மேலும் 3 ரபேல் விமானங்கள்... பிரான்சிடம் இந்தியா ஒப்பந்தம்...
இந்தியா, பிரான்சிடம் இருந்து ரபேல் வகை போர் விமானங்களை ஒப்பந்தம் செய்து வாங்குகிறது. 2016-ம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி 58 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 36 விமானங்கள் வாங்கப்படுகிறது.
 
இதுவரை 21 விமானங்கள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு விமானப்படையில் சேர்க்கப்பட்டு உள்ளது. தற்போது 7-வது முறையாக, 3 ரபேல் போர் விமானங்கள், பிரான்சில் இருந்து நேற்று வந்து சேர்ந்தன.
 
அவை 8 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை இடையில் நிற்காமல் கடந்து இந்தியா வந்து சேர்ந்தன. விமானங்கள் இடைவிடாமல் பறந்துவந்தபோது அரபு எமிரேட்சில் நடுவானில் எரிபொருளை நிரப்பிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இவற்றையும் சேர்த்து, இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ள ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது.