6, 7, 8 வகுப்புகளுக்கு செப்., 6-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!

கர்நாடகாவில் 6, 7, 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கான வரும் 6-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
6, 7, 8  வகுப்புகளுக்கு செப்., 6-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!
Published on
Updated on
1 min read

கர்நாடகாவில் 6, 7, 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கான வரும் 6-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கடந்த 23-ம் தேதி 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தற்போது 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 2 சதவீதத்திற்கு கீழ் உள்ள தாலுகாக்களில் மட்டுமே இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் 50 சதவீத மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெறும் எனவும் ஒரு வாரத்தில் ஐந்து நாட்களுக்கு பள்ளிகள் செயல்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com