கால்பந்து மைதானத்தில் பார்வையாளர்களின் இருக்கைகள் சரிந்து விழுந்து விபத்து: 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

கால்பந்து மைதானத்தில் பார்வையாளர்களின் இருக்கைகள் சரிந்து விழுந்து விபத்து: 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
Published on
Updated on
1 min read

கேரளாவில் கால்பந்து மைதானத்தில், பார்வையாளர்களுக்கென அமைக்கப்பட்ட இருக்கைகள் சரிந்து விழுந்ததில் இரு நூறுக்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மலப்புரம்  காளிகாவ் நகரில் உள்ள மைதானம் ஒன்றில், அகில இந்தியா 7-வது கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.

மேலும் இப்போட்டியை காண வரும் பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கென சுற்றிலும் மூங்கில் மற்றும் மர பலகைகளை கொண்டு இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் நேற்று நடைபெற்ற போட்டியின்போது, திடீரென இருக்கைகள் சரிந்து விழுந்தன. இதில் போட்டியை காண வந்த இரு நூறுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  
 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com