முதலமைச்சருக்கு ஷூ வாங்கிய ஷர்மிளா.... தன்னுடன் பாதயாத்திரை வரக் கூறி சவால்!!!

முதலமைச்சருக்கு ஷூ வாங்கிய ஷர்மிளா.... தன்னுடன் பாதயாத்திரை வரக் கூறி சவால்!!!

நான் கே.சி.ஆருக்கு ஷூ வாங்கித் தந்துள்ளேன்.  தைரியம் இருந்தால், மக்கள் பிரச்சனைகளை அறிய என்னுடன் கேசிஆர் பாதயாத்திரை செல்ல வேண்டும்.

எந்த பிரச்சினையும் இல்லை:

தெலுங்கானாவில் இந்த ஆண்டு நவம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  இந்நிலையில், ஒய்எஸ்ஆர்டிபி தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா, மக்கள் பிரச்னைகளை அறிய மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.  மறுபுறம், தனது மாநிலத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் முதல்வர் கேசிஆர் தெரிவித்துள்ளார். 

அரசியலை விட்டு விலகுவேன்:

கேசிஆர் கூறியதைக் தொடர்ந்து தெலுங்கானாவின் ஒய்எஸ்ஆர்டிபி தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா, மாநிலத்தின் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.  கே.சி.ஆர் என்னுடன் பாதயாத்திரை நடத்தி, அவரது ஆட்சியில் மாநில மக்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும் என்று கூறியதுடன் மாநில மக்களுக்கு பிரச்சனை இல்லை என்றால் அரசியலை விட்டு விலகுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com