மைசூர் சிங்கம் அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் ... நடிகை நமீதா!!

மைசூர் சிங்கம் அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் ... நடிகை நமீதா!!

"இன்றில்லை என்றாலும் நாளை நிச்சயம் வெல்வோம்" என நடிகையும், பாஜக செயற்குழு உறுப்பினருமான நமிதா தெரிவித்துள்ளார். 

கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் “பாஜக குடும்ப பிரிமியர் லீக் கிரிக்கெட் விளையாட்டு போட்டி” மதுக்கரை பகுதியில் நடைபெற்றது.  மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியை நடிகையும், பாஜக செயற்குழு உறுப்பினருமான நமீதா பேட் பிடித்தும் பந்து வீசியும் கிரிக்கெட் விளையாடி துவக்கி வைத்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் இன்று எனது முதல் அன்னையர் தினம் என்பதால் இந்த நிகழ்ச்சியை முடிந்தவுடன் உடனடியாக சென்னை கிளம்பி வீட்டிற்கு செல்ல உள்ளேன் எனவும் தெரிவித்தார். 

பாஜக மட்டும் தான் கட்சி உறுப்பினர்களை ஒருங்கிணைக்க இம்மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது எனவும் மைசூர் சிங்கம் அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் பாஜக கட்சி நன்கு முன்னேறி வருகிறது என்றும் குறிப்பிட்டார். மேலும் அதன் காரணமாக தான் எங்கு சென்றாலும் பாஜக பெயர் ஒலிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.கர்நாடகா தேர்தல் தோல்வி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பாஜக தலைவர் அண்ணாமலையின் கவனம் தமிழகத்தின் மீது இருக்கலாம் எனவும் அவர் தனது பணியை சிறப்பாக செய்வார் எனவும் தெரிவித்தார்.

மைசூரு சிங்கத்தின் தேர்தல் பணி கர்நாடகத்தில் எடுபடவில்லையே என்ற செய்தியாளரின் கேள்விக்கு என் தலைவரைப் பற்றி இவ்வாறு பேசக்கூடாது எனவும் தெரிவித்தார். மேலும் கர்நாடகா தோல்வி பெரிய பிரச்சனை இல்லை என்றும் அடுத்த முறை வெற்றி பெறலாம் என்றும் கூறியதுடன் பாஜக தலைவர் அண்ணாமலை, பாரத பிரதமர் மோடி ஆகியோர் மீது அனைவருக்கும் நம்பிக்கை உள்ளதால் இன்று வெற்றிபெறவில்லை  என்றால் நாளை வெற்றி பெற்று விடலாம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிக்க:  பெரியாறு அணையில் சுற்றித் திரியும் காட்டு யானைகள்...!!