கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை.. உரம் வாங்க இலங்கைக்கு இந்தியா கடன் உதவி!!

யூரியா உரம் வாங்குவதற்கு இலங்கைக்கு இந்தியா கடன் உதவி வழங்கியுள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை.. உரம் வாங்க இலங்கைக்கு இந்தியா கடன் உதவி!!

கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில், உணவு, மருந்து, சமையல் எரிவாயு, வாகன எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். அரசுக்கு எதிராக இலங்கையில் தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இலங்கையில் உரத்தட்டுப்பாடு நிலவுவதால், உணவு பொருள் விநியோகத்தில் நெருக்கடி ஏற்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார். நெல் பருவ சாகுபடிக்கு 65 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரம் தேவைப்படுவதால், உடனடி உர இறக்குமதி செய்வதற்கு இந்தியாவிடம், இலங்கை கடன் உதவி கோரியுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், உர இறக்குமதிக்காக இந்தியா 55 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இலங்கைக்கு கடன் வழங்கி உள்ளதாகவும், இது இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க உதவும் என்றும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.