இந்தநிலையில்,திடீர் திருப்பமாக இலங்கையை சேர்ந்த 13 மீனவர்களை இந்திய கடற்படை தாக்கியதாக புகார் எழுந்ததையடுத்து,அந்த செய்தியை இலங்கை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.இது குறித்து இலங்கை மீனவர்கள் கூறும்போது, நாங்கள் 13 மீனவர்கள் சேர்ந்து 2 மீன்பிடி படகுகளில் மீன் பிடிக்க கடலுக்கு சென்ற நிலையில்,கடந்த 4-ந் தேதி நாங்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இந்திய கடற்படை வீரர்கள் அங்கு வந்து எங்களை அடித்து உதைத்து தாக்குதல் நடத்தினர்.அப்போது,நாங்கள் அனைவரும் மீனவர்கள் என்று கூறிய போதிலும் ,அவர்கள் எங்களை விடுவிக்கவில்லை என்று அவர்கள் கூறியதாக இலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.