ஓடும் ரயிலில் திடீரென பற்றிய தீ...உயிர் சேதம் இல்லாமல் காப்பாற்றிய  தீ அணைப்பு வீரர்கள் ...

ஓடும் ரயிலில் திடீரென பற்றிய தீ...உயிர் சேதம் இல்லாமல் காப்பாற்றிய  தீ அணைப்பு வீரர்கள் ...
Published on
Updated on
2 min read

அகமதாபாத்தில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று தீ விபத்து ஏற்பட்டுஉள்ளது.பயணிகள் எச்சரித்த காரணத்தால் ஆந்திர மாநிலம் கூடூர் ரயில் நிலையம் அருகே ரயிலை நிறுத்தி ரயில்வே ஊழியர்கள் தீயை அணைத்தனர் .


அகமதாபாத்தில் இருந்து சென்னை சென்று கொண்டு இருந்த நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலின் கிச்சன் போகியில் இன்று அதிகாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.கிச்சன் போகியிலிருந்து புகை வருவதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து ஊழியர்களை எச்சரித்தனர்.இந்த நிலையில் ரயில் கூடூர் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டு கிச்சன் போகியில் எரிந்து கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டது.பின்னர் ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com