உள்நாட்டு விமான டிக்கெட் திடீர் உயர்வு... விமானப் பயணிகள் வருத்தம்...

பண்டிகை கால தொடா் விடுமுறை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை உயர்வால் அதிகரித்த விமான சேவை டிக்கெட்  கட்டணம் திடீரென உயர்ந்துள்ளது.

உள்நாட்டு விமான டிக்கெட் திடீர் உயர்வு... விமானப் பயணிகள் வருத்தம்...

ஆயுத பூஜை உள்பட நவராத்திரி விழாவிற்காக தொடா்ந்து 4 நாட்கள் விடுமுறைகள் காரணமாக சொந்த  ஊா்களுக்கு செல்லும் பயணிகள் கூட்டம் பஸ், ரெயில்களில் நிறைந்து வழிகிறது. கொரோனா 2ம் அலை பெருமளவு குறைந்து வருவதால் பொதுமக்கள் கூடுதல் உற்சாகத்துடன் தங்களுடைய பயணங்களை செய்கின்றனர்.

பஸ், ரெயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காத பயணிகள் விமான பயணங்களை மேற்கொள்கின்றனா். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிறைந்து வழிகிறது. நேற்றைய தினம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து 190 விமானங்கள் இயக்கப்பட்டு 15 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். ஆனால் இன்று 213 விமான சேவைகளாக அதிகரித்து புறப்பாடு மற்றும் வருகை பகுதியின் பயணிகள் 20 ஆயிரமாக அதிகரித்து உள்ளது. ஒரே நாளில் 23 விமானங்களும், 5 ஆயிரம் பயணிகளும் அதிகரித்துள்ளது. நாளை பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் பயணிகள் எண்ணிக்கை உயர்வால் விமான சேவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. இது விமான நிலைய வட்டாரத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனால்  உள்நாட்டு விமான கட்டணங்களின் திடீா் உயா்வு பயணிகளை அதிா்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வழக்கமாக ரூ.4,500 ஆக இருந்த கட்டணம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ. 7,500 ஆக அதிகரித்து உள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் சென்னை-தூத்துக்குடி விமான கட்டணம் ரூ.3,500 ஆகத்தான் இருந்தது. ஆனால் விமான நிறுவனங்கள் நஷ்டத்தில் உள்ளன என்று கூறி 2 முறை கட்டண உயா்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

அதனால் தான் தூத்துக்குடிக்கு ரூ.3,500 ஆக இருந்த குறேந்தப்பட்ச கட்டணம் ரூ.4,500 ஆக மாறியது. தற்போது விமான நிறுவனங்கள் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும்போது கட்டணத்தை அதிகரித்து விடுகின்றனா் என்று விமான பயணிகள் தரப்பில் கூறுகின்றனா். அதைப்போல் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, திருவனந்தபுரம், பெங்களூா் செல்லும் பயணிகள் கட்டணமும் அதிகரித்துள்ளது.

இதுபற்றி விமானநிறுவனங்கள் தரப்பில் விசாரித்தபோது, பயணிகள் கூட்டத்தால் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதாக கூறுவது தவறு. குறைந்த கட்டணத்தில் குறிப்பிட்ட சீட்கள் மட்டும் ஒதுக்கி விட்டு மற்ற சீட்களுக்கு 2 அல்லது 3 விதமான கட்டணங்களை நிா்ணயித்திருப்போம். முதலில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு குறைந்த கட்டண டிக்கெட்டும் அதன்பின்பு வருபவா்களுக்கு படிப்படியாக கட்டணம் அதிகரிக்கும். இதுதான் நடைமுறையில் உள்ளது என்று கூறுகின்றனா்.