பள்ளி சீருடையுடன் சிறுமியை பூங்காவிற்கு அழைத்து சென்று... காதலனுக்கு சரமாரி அடி உதை

பள்ளி சீருடையுடன் சிறுமியை பூங்காவிற்கு அழைத்து சென்று... காதலனுக்கு சரமாரி அடி உதை
Published on
Updated on
1 min read

வட மாநிலத்தில் பள்ளி சீருடையுடன் ஒரு சிறுமி பூங்காவிற்கு காதலனுடன் சென்றுள்ளனர்.அங்கே தனிமையில் கட்டி அணைத்தப்படி அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டு வந்துள்ளனர் இதனை கண்ட மற்றொரு நபர் அவரது மொபைலில் வீடியோ பதிவு செய்தவாறே காதல் ஜோடியை நோக்கி சென்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காதல் ஜோடி எழுந்து வந்து வீடியோ எடுப்பதை நிறுத்துமாறு அந்த நபரிடம் முதலில் அதிகார தோணியில் கூற அந்த நபர் காதலனை அந்த நபர் சரமாரியாக அடித்தவுடன் அந்த சிறுமி பின்னர் கெஞ்சிக் கேட்டார்.

இவரை அடிக்காத என கூறிய காதலிக்கு பின்னால் இருந்து வந்த நபர் காதலனை கண்டித்து சிறுமிக்கும் அடி விழுந்தது. சுதாரித்துக்கொண்ட காதல் ஜோடி இங்க இருந்து செல்வதற்கு வேறு வழியில்லை என்று எண்ணி மன்னிப்பு கேட்கவே சிறுமியை பள்ளி காலங்களில் காதல் தேவையற்றது என வாக்குமூலம் கொடுக்க வைக்கிறார்கள். 

காதலனும் பள்ளி சிறுமிகளை காதலிக்கக் கூடாது அவர்களுக்கு படிப்பு முக்கியம் என்று தெரிவித்த வீடியோவில் சிறுமி தனக்கு தற்போது 18 வயது ஆகிறது பள்ளியில் பயின்று வருகிறேன் என்று கூறினார்.

இதனாலேயே பள்ளி சிறுமிகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோவால் இளைஞர்கள் காதல் ஜோடிகளை தாக்குவதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

சிறுமி மைனர் என்பதால் காவல்துறையினர் காதலன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com