அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பிய தேர்தல் ஆணையம்!!!

அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பிய தேர்தல் ஆணையம்!!!

அதிகாரிகளை இடமாற்றம் செய்ததில் இணக்க அறிக்கை அனுப்பப்படாதது குறித்து குஜராத்தின் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது.

இந்த விவகாரத்தில் இவ்வளவு காலம் கடந்தும் ஏன் இணக்க அறிக்கையை தயார் செய்து அனுப்ப முடியவில்லை என குஜராத் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியிடம் தேர்தல் ஆணையம் கேள்வியெழுப்பியுள்ளது.

குஜராத் மாநில தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆணையம் நிர்ணயித்த நிபந்தனைகளின் கீழ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது தொடர்பான இணக்க அறிக்கை தாக்கல் செய்யப்படாததால், ஆணையம் இந்த நோட்டீஸ் அனுப்பி உடனடியாக அறிக்கை கோரியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் வழிகாட்டுதல்களை வழங்கியும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிந்த பிறகும் இணக்க அறிக்கை ஏன் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறித்து இப்போது அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் பணியிடங்கள் தொடர்பான கடிதங்கள் அனுப்பப்பட்டன. குஜராத் தேர்தலுக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஹிமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 4 ஆண்டுகளில் ஒரு மாவட்டத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் சொந்த மாவட்டங்களில் பணிபுரியும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய இரு மாநில அரசுகளுக்கும் ஆணையம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதையும் படிக்க:   ”இங்கேயே படிப்போம் இல்லையேல் இறப்போம்....” உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள்!!! தாயகம்திரும்ப மறுப்பு!!!