பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் சர்ப்ரைஸ் கொடுத்த மணமக்கள்...பாதியில் நேர்ந்த விபரீதம்...!

சத்தீஸ்கர் மாநிலத்தில்  திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது, 12 அடி உயரத்தில் மணமக்கள் அமர்ந்திருந்த ஊஞ்சல் அறுந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் சர்ப்ரைஸ் கொடுத்த மணமக்கள்...பாதியில் நேர்ந்த  விபரீதம்...!
Published on
Updated on
1 min read

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் திருமண நிகழ்ச்சி ஒன்று கோலாகலமாக நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் மணமக்களுக்கென்று சுமார் 12 அடி உயரத்தில் ஊஞ்சல் ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது. 

அப்போது, மணமேடைக்கு வரவேற்பு கொடுத்த மணமக்கள் மணமேடையில் இருந்து 12அடி உயரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த ஊஞ்சலில் நின்றவாறு அனைவரையும் பார்த்து கை அசைத்தனர். 

இந்நிலையில், எதிர்பாராத விதமாக சிறிது நேரத்தில் ஊஞ்சலின் ஒரு பக்கத்தின் கயிறு அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் மணமக்கள் தவறி கீழே விழுந்து சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.

மேலும், 12 அடி உயரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலை சுற்றி நடத்தப்பட்ட வானவேடிக்கைகளே இந்த விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் 12 அடி உயரத்தில் மணமக்கள் அமர்ந்திருந்த ஊஞ்சல் அறுந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com