நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு.. இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு.. இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றை பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த நிலையில் இன்று மீண்டும் 12 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் தினசரி பாதிப்பு விகிதம் மீண்டும் 3.94 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதில் தீவிர தொற்று பாதிப்புக்கு 13 பேர் பலியாகியுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 9 ஆயிரத்து 862 பேர் தொற்று பாதிப்பு நீங்கி வீடு திரும்பியுள்ள நிலையில் 81 ஆயிரத்து 687 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் இதுவரை 196 கோடியே 45 லட்சத்து 99 ஆயிரத்து 906 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் இதில் நேற்று மட்டும் 12 லட்சத்து 28 ஆயிரத்து 291 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துரை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.