மகாராஷ்டிரா: மழை வெள்ளத்தில் மூழ்கிய 20 கிராமங்கள்.. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு!!

மகாராஷ்டிரா: மழை வெள்ளத்தில் மூழ்கிய 20 கிராமங்கள்.. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு!!

மகாராஷ்டிராவில் மழை வெள்ள பாதிப்புகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 102 ஆக  உயர்ந்துள்ளதாக மாநில பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சுமார் 20 கிராமங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின.

இதையடுத்து அப்பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலர் மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில பேரிடர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 1 முதல் 14ஆம் தேதி வரை மழை வெள்ளம், மின்னல், நிலச்சரிவு போன்ற விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிகை 102ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.