விபத்தில் இருந்து தப்பித்த விமானம்...!!!

விபத்தில் இருந்து தப்பித்த விமானம்...!!!

இந்திய கடற்படை ஹெலிகாப்டர் ஒன்று மும்பை கடற்கரையில் அரபிக் கடல் அருகே அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. 

இந்திய கடற்படை ஹெலிகாப்டர் ஒன்று மும்பை கடற்கரையில் அரபிக் கடல் அருகே அவசரமாக தரையிறக்கப்பட்டது.  அதில் இருந்த குழுவினர் பத்திரமாக காப்பாற்றப்பட்டுள்ளனர்.  இந்திய கடற்படையின் கூற்றுப்படி, இந்திய கடற்படை மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் மும்பையில் இருந்து வழக்கமான பயணத்தை மேற்கொண்டது. 

அப்போது கடற்கரை அருகே சென்றபோது விமானம் விபத்துக்குள்ளானது.  உடனடியாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் விளைவாக கடற்படையின் ரோந்துக் கப்பல் மூலம் அதில் இருந்த மூன்று பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.   இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    “பெண்கள் என்றால் அடிமை....” முதலமைச்சர் ஸ்டாலின்!!!