
லக்னோ மாவட்டம் பிஜ்னூரில் 1 கோடியே 16 லட்ச ரூபாய் செலவில், 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார்சாலை புனரமைக்கப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற திறப்பு விழாவில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. மவுசம் சவுத்ரி கலந்து கொண்டு, சடங்கு சம்பிரதாயபடி தேங்காய் உடைத்துள்ளார்.
அப்போது, தேங்காய்க்கு பதிலாக புதிய தார்சாலை, சிறு-சிறு துண்டுகளாக சிதறியது. இதனால் வருத்தம் அடைந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ., சாலையின் தரத்தை மண்வெட்டியால் சோதனை செய்தார். இதனையடுத்து, சாலை தரமற்று இருப்பதை கண்டறிந்த அவர், இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.