இந்தியாவில் டிவிட்டர் தளம் முடக்கம்?
இந்தியாவில் டிவிட்டர் தளம் கடந்த சிறிது நேரம் முடங்கிய நிலையில் பின் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் டிவிட்டர் தளம் கடந்த சிறிது நேரம் முடங்கிய நிலையில் பின் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசில் புதிய டிஜிட்டல் விதிகளுக்கு இணங்க கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் ஒப்புக்கொண்ட நிலையில் டிவிட்டர் மட்டும் முரண்டு பிடித்து வருகிறது. இதனால் மத்திய அரசுக்கும், டிவிட்டர் நிறுவனத்திற்கும் இடையேயான மோதல்போக்கு நாளுக்குநாள் முற்றி வருகிறது. புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்க டிவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு பல முறை அவகாசம் வழங்கியும், அதனை ஏற்காததால் அந்நிறுவனத்திற்கான சட்ட பாதுகாப்பை திரும்ப பெற்றது மத்திய அரசு.
இந் நிலையில் இந்தியாவில் டிவிட்டர் தளமானது இன்று காலை சிறிது நேரம் முடங்கிய நிலையில் பின் மீண்டும் செயல்பட தொடங்கியது. இது மத்திய அரசின் நடவடிக்கையா அல்லது டிவிட்டர் தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறா என்பது தெரியவில்லை. இதுகுறித்து டிவிட்டர் நிறுவனம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.