மணிப்பூர் வன்கொடுமை: மேலும் இருவர் கைது!

மணிப்பூர் வன்கொடுமை: மேலும் இருவர் கைது!

மணிப்பூரில் பழங்குடியினப் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை தொடா்பாக மேலும் இருவரை காவல் துறையினா் கைது செய்துள்ளனர்.


மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாத தொடக்கத்தில் கலவரம் மூண்டது. அதன்பிறகு நீடித்து வரும் வன்முறையில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 

இதையும் படிக்க : திருபுவனம் ராமலிங்கம் வழக்கு: தமிழ்நாடு முழுவதும் 24 இடங்களில் என். ஐ.ஏ சோதனை!!

இந்தச் சூழலில், காங்போக்பி மாவட்டத்தில் கடந்த மே 4-ஆம் தேதி இரண்டு பழங்குடியினப் பெண்கள், மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த நபர்களால் நிர்வாணமாக்கப்பட்டு ஊா்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிா்ச்சிக்குள்ளாக்கியது. 

இதையடுத்து, பாலியல் வன்முறையை நிகழ்த்திய கும்பலைச் சோ்ந்த 4 போ் ஏற்கனவே கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய 18 வயது சிறுவன் உட்பட மேலும் இருவரை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.