ஸ்ரீநகரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை... பாதுகாப்பு படையினர் அதிரடி...

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொள்ளப்பட்டனர்.

ஸ்ரீநகரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை... பாதுகாப்பு படையினர் அதிரடி...
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் அப்ரார் என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று கைது செய்யப்பட்ட அப்ரார், பதுக்கி வைத்திருந்த ஏகே 47 ரக துப்பாக்கிகளை பறிமுதல் செய்வதற்காக அவரது வீட்டுக்கு பாதுகாப்பு படையினர் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் காமாண்டர் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அப்ராரும் அவருடன் சேர்ந்து தாக்குதல் நடத்த, பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் இருவரும் கொல்லப்பட்டதாக அம்மாநில காவல்துறை தலைவர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
 
 ஜம்மு காஷ்மீரில் சமீபகாலமாக காவல்துறையினரைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அவர்களை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாதுகாப்பு படையினர் எடுத்து வருகின்றனர்.