நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 94 கோடி பேர் உள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, அவர்களுக்கு 2 தவணை கொரோனா தடுப்பூசிகளை செலுத்த 186 முதல் 188 கோடி வரையிலான தடுப்பூசிகள் தேவைப்படுவதாகவும், டிசம்பர் மாதத்திற்குள் மேலும் 135 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும் என்றும். அவற்றைக் கொண்டு இந்த ஆண்டு டிசம்பருக்குள், 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகளை செலுத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாகவும் அந்த பிரமாணபத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.