இது டெல்டா மாறுபாட்டை காட்டிலும் அதீத பரவல் தன்மை மற்றும் தொற்று வீரியம் கொண்டது என நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இதுவே 3 ஆம் அலைக்கு காரணமாக அமையப்போவதாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். டெல்டா பிளஸ் வைரஸ் தமிழகம், மத்திய பிரதேசம், மகராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களில் பரவி இருப்பதாகவும், இதனால் 40 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.