திடீரென செந்நிறமாக மாறிய கடல் நீர்!

Published on
Updated on
1 min read

புதுச்சேரியில் உள்ள கடல் நீரானது இன்று திடீரென 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு செந்நிறத்தில் மாறியது. இதனால் கடற்கரைக்கு வந்த, பொதுமக்கள், மற்றும் சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.மேலும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க அச்சமடைந்தனர்.

இதனையடுத்து கடல் நீரின் நிறம் செம்மண் நிறமானது என்ற தகலவறிந்த, ஏராளமானோர் கடற்கரையில் குவிந்தனர். இதனையடுத்து அங்கு வந்த சுற்றுசுழல் அதிகாரிகள். கடல் நீரை பரிசோதனை செய்வதற்கு கடல்நீரை பாட்டிலில் எடுத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் ஆற்றில் உருவாகும் ஒரு வகையான பூஞ்சை காளன்  ஆற்று நீரோடு கடலில் கலக்கும் போது ராசாயன மாற்றம் ஏற்பட்டதே நீரின் நிற மாற்றத்திற்கு காரணம் என   அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பான விரிவான தகவலை பின்னர் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com