விடைபெறுகின்றது  2000 ரூபாய் நோட்டுகள்!!

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான இந்திய ரிசா்வ் வங்கி அறிவித்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்தபோது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், கடந்த மே மாதம் மீண்டும் கொண்டு வரப்பட்ட பணமதிப்பு இழப்பு நடவடிக்கையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும் திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. 

இதையடுத்து, செப்டம்பர் மாத இறுதிக்குள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எந்தவித படிவம் மற்றும் அடையாள அட்டைகளும் இன்றி வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. மேலும், செப்டம்பர் 30-ம் தேதிக்கு மேல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற இயலாது என்றும் தெரிவித்தது. இதையடுத்து பொதுமக்கள் உடனே தங்களிடம் புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.  

அதன்படி, நாட்டின் 93 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மீதமுள்ள நோட்டுகளையும் மாற்றிக்கொள்ள இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலக்கெடுவை நீட்டிக்கும் எண்ணம் இல்லை என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள அரசு அழைப்பு விடுத்துள்ளது. 

ஏற்கனவே மக்களிடையே 2 ஆயிரம் ரூபாயின் நோட்டுகள் பெரும்பாலும் புழக்கத்தில் இல்லாத நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதியில் இருந்து, 3 புள்ளி 32 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாக ரிசா்வ் வங்கி தொிவித்துள்ளது.