உத்திரப்பிரதேசத்தில் மேலும் தளர்வுகள்... இன்று முதல் திரையரங்குகளுக்கு அனுமதி...

உத்திரப்பிரதேசத்தில் இன்று முதல் திரையரங்குகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் மேலும் தளர்வுகள்... இன்று முதல் திரையரங்குகளுக்கு அனுமதி...
Published on
Updated on
1 min read
உத்திரபிரதேசத்தில் இன்று முதல் திரையரங்குகளை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் உத்திர பிரதேசத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவதன் அடிப்படையில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இதல் திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், மல்டிபிளெக்ஸ்-கள், விளையாட்டு அரங்குகள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இவை வாரத்தில் 5 நாட்களுக்கு மட்டுமே திறக்கவும் 50 சதவீதம் வாடிக்கையாளர்களுடன் இயங்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதியில்லை. திரையரங்குகளை பொறுத்தவரை டிக்கெட்டுகள் ஆன்லைன் வாயிலாக மட்டுமே விநியோகிக்கப்படும் என்றும் நேரடி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com