உத்திரபிரதேசத்தில் இன்று முதல் திரையரங்குகளை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் உத்திர பிரதேசத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவதன் அடிப்படையில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இதல் திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், மல்டிபிளெக்ஸ்-கள், விளையாட்டு அரங்குகள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.