இந்த நிலையில், இன்று மாலையே அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், ஜோதிராதித்ய சிந்தியா, சர்பானந்த சோனாவால் உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுவரையில் இல்லாத அளவுக்கு அமைச்சரவையில் இளம் வயதினருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும், விரைவில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த மாநிலங்களுக்கு மத்திய அமைச்சரவையில் கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. தமிழகத்தில் பாஜக கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.வுக்கும் அமைச்சர் பதவி கிடைக்குமா? எனத் தெரியாத நிலையில், அமைச்சர் பதவியில் சரியாக செயல்படாத சிலரை நீக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் மாலை 6 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.