இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல்: கூலிப்படை அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்!

இலங்கை அரசின் கூலிப்படை அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம்  மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட நிகழ்வு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் தள பதிவில் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டகாசத்தை இனியும் வேடிக்கை பார்க்காமல், பன்னாட்டு கடல்பாதுகாப்பு சட்டப்படி  கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க : வேட்டைக்கும் ரெடி! கோட்டைக்கும் ரெடி! - போஸ்டர் கொண்டாட்டம்

தொடர்ந்து, பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இலங்கை கடற்கொள்ளையர்களை பன்னாட்டு காவல்துறை உதவியுடன் கைது செய்து தண்டிக்க தமிழக அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.