பாரத் பயோடெக் நிறுவனத்தால் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது கோவாக்சின் தடுப்பூசி. இது தற்போது இந்தியாவில் மக்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் சர்வதேச நாடுகளுக்கும் வணிக ரீதியில் ஏற்றுமதி செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 கோடி கோவாக்சின் டோஸ்களை வாங்க பிரேசில் ஒப்பந்தம் போட்டிருந்த நிலையில் தற்போது முறைகேடு புகார்களைக் கூறி இந்தியாவுடனான ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் மார்செலோ குயிரோகா அறிவித்துள்ளார்.