இலங்கையில் ஜனநாயகம் தொடர வேண்டும் - இந்தியா விருப்பம்!

இலங்கையில் ஜனநாயகம் தொடர வேண்டும் என இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஜனநாயகம் தொடர வேண்டும் - இந்தியா விருப்பம்!
Published on
Updated on
1 min read

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகிய இருவரையும் பதவி விலக கோரி போராட்டம் நடத்தி வந்த நிலையில, இலங்கையில்  கடும் வன்முறை வெடித்தது.

பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக மகிந்த ராஜபக்சே அறிவித்த சில மணி நேரங்களில், ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும், அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறை வெறியாட்டம் நடத்தியதில் பலர் படுகாயம் அடைந்தனர். இதனால், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் களம் இறக்கப்பட்டதால் இலங்கை முழுவதும் பதற்றம் அதிகரித்தது.

இந்நிலையில் இலங்கையில் ஜனநாயகம் தொடர வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் ஜனநாயகம், உறுதித் தன்மை, பொருளாதார மீட்சி ஏற்படுவதை இந்தியா முழுமையாக ஆதரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையின் பொருளாதார மீட்டெடுப்புக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும் எனவும்  ஜனநாயக முறைப்படி இலங்கை மக்களுடைய நலன்களில் இந்தியா எப்போதும் கவனம் செலுத்தும் எனவும் வெளியுறவுத்துறை உறுதி அளித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com