இஸ்ரேலின் பெகாசஸ் கருவி மூலம் இந்தியர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுகேட்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்து வருகிறது. இதனை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் மளியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், பெகாசஸ் உளவு கருவியை பயன்படுத்த மத்திய அரசுக்கு யார் அதிகாரமளித்தது என கேள்வி எழுப்பினார்.