பெங்களூருவில் 4 நாட்கள் மதுக்கடைகள் திறக்க தடை - காவல்துறை ஆணையா் உத்தரவு

பெங்களூருவில் இன்று முதல் 4 நாட்களுக்கு மதுக்கடைகள் திறக்க தடை விதித்து கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூருவில் 4 நாட்கள் மதுக்கடைகள் திறக்க தடை - காவல்துறை ஆணையா் உத்தரவு

பெங்களூரு காவல்துறை ஆணையா் கமல்பந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில், பெங்களூரு அல்சூரில் உள்ள கோதண்டராமர் கோவிலில் பல்லக்கு உற்சவத்தையொட்டி  இன்று மற்றும் நாளை அல்சூர் சுற்றுவட்டார பகுதிகளில், மதுக்கடைகளை திறக்கவும்,  விற்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.  

இதுபோல முத்தியாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி கமர்சியல் தெரு, புலிகேசிநகர், சிவாஜிநகர் உள்ளிட்ட பகுதிகளில், 13, 14-ம் தேதிகளில் மதுக்கடைகளை திறக்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொிவிக்கப்பட்டுள்ளது.