மும்பையில் சொகுசு கப்பல் ஒன்றில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கடந்த 3-ஆம் தேதி ஆர்யன் கான் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள 8 பேரையும் அக்டோபர் 21 ஆம் தேதி நீதிமன்றக் காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே ஆர்யன் கான் தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் அக்டோபர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.