துணிக்கடையில் ரூ.3 லட்சம் மதிப்பிலான ஆடைகளை திருடி சென்ற ராஜஸ்தான் வாலிபர்கள் கைது

புதுச்சேரியில் துணிக்கடையில் ரூ.3 லட்சம் மதிப்பிலான ஆடைகளை திருடி சென்ற ராஜஸ்தானை சேர்ந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

துணிக்கடையில் ரூ.3 லட்சம் மதிப்பிலான ஆடைகளை திருடி சென்ற  ராஜஸ்தான் வாலிபர்கள் கைது

புதுச்சேரி செயிண்ட் தெரேசா வீதியில் உள்ள ஒரு துணிகடையில் கடந்த அக்டோபர் 15- ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று  3 லட்சம் மதிப்பிளான ஆடைகளை திருடி சென்றனர்.

இந்த திருட்டு குறித்து கடையின் உரிமையாளர் ஒம். பிராகாஷ் பெரிய கடை காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், துணி கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்க்கொண்டனர்.

விசாரணையில் ராஜஸ்தான் மாநில பதிவு எண் கொண்ட ஸ்ஃபிட் கார் ஒன்று கடை சந்தேகப்படும் படியாக கடை அருகே வந்து சென்ற காட்சி கேமிராவில் பதிவானது. அதனையடுத்து அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.

அதில் அந்த கார் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மிர மாவட்டம் பகபேரா என்ற ஊரை சேர்ந்த ரியாஸ் முகமதுக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. அதனைதொடர்ந்து  ராஜ்ஸ்தான் விரைந்து சென்ற போலீசார்  முகமது ரியாஸ் மற்றும் அவரது நண்பர் உசைன் ஆகியோரை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் துணி கடை திருட்டில் ஈடுப்பட்டதை பிடிபட்டவர்கள் ஒப்புகொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து இருவரிடமிருந்து திருடப்பட்ட 3 லட்ச ரூபாய் மதிப்பிலான ஆடைகள், திருட்டுக்கு பயன்படுத்திய ஸ்ஃபிட் கார், மற்றும் செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்..