கடல் அலையில் சிக்கிய பள்ளி மாணவன் பலி...!!
புதுச்சேரியில் கடலில் குளித்த பள்ளி மாணவன், அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியை அடுத்த புதுக்குப்பம் கடற்கரையில் நேற்று மாலை பள்ளி மாணவர்கள் 3 பேர் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது தவளக்குப்பம் நல்லவாட்டை சேர்ந்த பிரதாப் என்கிற 13 வயது பள்ளி மாணவன் கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார்
இதனை பார்த்த சகமாணவர்கள் கூச்சலிடவே உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கடலில் மாயமான மாணவனை தேடி வந்தனர். அதனைதொடர்ந்து கடலோர காவல்படை மற்றும் மீனவர்கள் நெடுநேரம் தேடியும் மாணவனை கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் மாணவன் உடல், நல்லவாடு கடற்கரைப்பகுதியில் கரை ஒதுங்கியது. இறந்த உடலை கைப்பற்றிய தவளகுப்பம் போலீசார், அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.