காஷ்மீரில் துப்பாக்கி சூடு...4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய இருவேறு என்கவுண்டர் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் துப்பாக்கி சூடு...4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள பொம்பே மற்றும் கோபால்புரா ஆகிய 2 கிராமங்களில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து அந்த இரண்டு காஷ்மீர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் இன்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த பதிலடி தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.