ரியல் எஸ்டேட் அதிபரை வெட்டிக் கொலை செய்த கும்பல்-  பதறவைக்கும் சிசிடிவி காட்சி...

ரியல் எஸ்டேட் அதிபரை வெட்டிக் கொலை செய்த கும்பல்- பதறவைக்கும் சிசிடிவி காட்சி...

பெங்களூருவில் 5 பேர் கொண்ட கும்பல், ரியல் எஸ்டேட் அதிபரை வெட்டிக் கொன்ற சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

பெங்களூரு அருகேயுள்ள மார்கொண்டனஹள்ளியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளரான குல்லா வெங்கடேஷ் என்பவர், கடந்த சனிக்கிழமை தனது நண்பர்களுடன் சேர்ந்து, அருகே உள்ள டீக்கடையில் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. தொழில் விவகாரம் தொடர்பாக, வெங்கடேஷின் எதிரிகள் கூலிப்படையை வைத்து கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் கொலை செய்யப்பட்டாரா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வெங்கடேஷ் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com