சிறுமிகளை பலவந்தமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்திய நபர்...வீடியோ எடுத்து ஆன்லைனில் விற்பனை

திருப்பதி அருகே சிறுமிகளை பலவந்தமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தி, அதனை வீடியோ எடுத்து ஆன்லைனில் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சிறுமிகளை பலவந்தமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்திய நபர்...வீடியோ எடுத்து ஆன்லைனில் விற்பனை
Published on
Updated on
1 min read

சிறுமிகளை விபச்சாரத்தில் பலவந்தமாக ஈடுபடுத்துவது, ஆபாச படங்களை பதிவேற்றம் செய்வது ஆகிய அட்டூழியங்கள் பற்றி சிபிஐ நாடு முழுவதும் விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்து வருகிறது.

இது போன்ற குற்றச்சாட்டுகள் நாட்டின் 14 மாநிலங்களில் உள்ள 83 பேர் மீது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருப்பதியில் சிறுமிகளை பலவந்தமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தி அதனை வீடியோ எடுத்து அந்த காட்சிகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வந்த, மோகனகிருஷ்ணன் என்பவரை  போலீசார் இன்று கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது....

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com