தமிழகத்துக்கு ரூ.1,112 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்

உலக தரம் வாய்ந்த நகரமாக சென்னையை மாற்றும் திட்டத்துக்கு உலக வங்கி 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்கியுள்ளது.

தமிழகத்துக்கு ரூ.1,112 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்

உலக தரம் வாய்ந்த துய்மையான நகரமாக சென்னையை மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசுக்கு 1,112 கோடி ரூபாய் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்தது.

இந்த வங்கியின் செயல் இயக்குநர்கள் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக உலக வங்கி நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் கழிவுநீர் மேலாண்மை, சுகாதார சேவை மையங்கள், திடக்கழிவு மேலாண்மை, சுகாதார வசதி அதிகரிப்பு, கல்விநிலையங்கள் போன்றவற்றை பலப்படுத்த இந்த கடன் தொகை உதவியாக இருக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.