15வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர்: போட்டிக்கான  அட்டவணை வெளியீடு.. முதல் போட்டி யாருக்கு?

15வது ஐபிஎல் கிரிகெட் தொடர் வரும் 26ம் தேதி தொடங்க உள்ள நிலையில் போட்டிக்கான  அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

15வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர்: போட்டிக்கான  அட்டவணை வெளியீடு.. முதல் போட்டி யாருக்கு?

15 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி 65 நாட்கள் நடைபெறும் என பிசிசிஜ தெரிவித்துள்ளது.  இந்த தொடரில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள், 4 பிளே ஆப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதில் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தபோட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.  கடைசி லீக் ஆட்டம் மே மாதம் 22-ஆம் தேதி வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

மும்பை வான்கடே மைதானம் மற்றும் டி. ஒய்.பாட்டீல் ஆகிய மைதானங்களில் தலா 20 லீக் ஆட்டங்களும், மும்பை பிரபோன் மைதானம் மற்றும் புனே எம்சிஏ சர்வதேச ஸ்டேடியத்தில் தலா 15 போட்டிகளும் நடக்கின்றன. இரண்டு போட்டிகள் நடைபெறும் நாட்களில் முதல் போட்டி பிற்பகல் 3.30 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 7.30 மணிக்கும் தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

லீக் ஆட்டங்களுங்கான அட்டவணையை வெளியிட்டுள்ள நிலையில் பிளேஆப் போட்டிகள் மற்றும் மே 29ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும் அணிகள் மற்றும் மைதானங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.