ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகள்: விரைவில் பிசிசிஐ அறிவிப்பு...

அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் மேலும் இரண்டு அணிகளின் பெயர்கள் என்ன என்பது குறித்து பிசிசிஐ விரைவில் அறிவிக்கவுள்ளது.

ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகள்: விரைவில் பிசிசிஐ அறிவிப்பு...

ஐபிஎல் 14-வது சீசனின் இரண்டாவது பாகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 15-ம் தேதியுடன் ஐபிஎல் 14-வது சீசன் முடிவடைகிறது. இந்த சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இதனிடையே ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். 8 அணிகள் பங்கேற்பதை 10 அணிகளாக அதிகரிக்க பிசிசிஐ முடிவு செய்து. அடுத்த ஆண்டு ஐபிஎல் 15-வது சீசனில் இருந்து 10 அணிகள் விளையாடும் என அறிவித்த பிசிசிஐ, அணிகளை வாங்க விருப்பம் உள்ள நிறுவனங்கள் அதற்கான விண்ணப்பத்தை விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தது. முதலில் அக்டோபர் 5ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என தெரிவித்து இருந்தது. தற்போது 10ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், அக்டோபர் 25ம் தேதி இரண்டு அணிகள் எவை.? என்பதை பிசிசிஐ அறிவிக்கும் என ஐபிஎல் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது. மேலும் ,அணிகள் அறிவிக்கப்பட்டதும், 2023 முதல் 2027 ஐபிஎல் மீடியா உரிமைக்கான டெண்டர் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.